யாழில் நெஞ்சுவலி காரணமாக திடீரென உயிரிழந்த கிராமஉத்தியோகஸ்தர்

யாழில் திடீர் நெஞ்சுவலி காரணமாக கிராம அலுவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுதியுள்ளது. சம்பவத்தில் J/369 கரவெட்டி கட்டைவேலி கிராம அலுவலரே திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற உற்பத்தித்திறன் போட்டியில் பிரதேச செயலகம் சார்பில் விருது பெற்றிருந்தார். அத்துடன் உயிரிழந்த கிராம அலுவலர் , கிராமத்தின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவையாற்றிய கிராம அலுவலராக திகழ்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.